districts

img

பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்திடுக ஆர்.ஜெயராமன் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 14-

     பாதாள சாக்கடை பணி களை விரைந்து முடிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் வலியுறுத்தி னார்.

   திருவொற்றியூர் மண்டல வார்டு குழு கூட்டம் மண்டல தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் வெள்ளியன்று (ஜூலை 14) நடைபெற்றது. கூட்டத்தில் 33 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் பேசுகையில், மாநகராட்சி, நகராட்சி பேரூ ராட்சி உள்ளாட்சி அமைப்பு களில் பணியாற்றும் மேயர் துணை மேயர், நக ராட்சி தலைவர், துணைத் தலைவர், பேரூ ராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கு மதிப் பூதியம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறி வித்துள்ளதற்கு நன்றி தெரி வித்தார்.

   மேலும் குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டு வரும் பணிகளில் மிகப் பெரிய தொய்வு உள்ளது. எந்தவொரு தனிநபரையும் குறை சொல்ல விரும்ப வில்லை. வாரியத்தின் ஒட்டுமொத்த அமைப்பின் செயல்பாட்டில் உள்ள குறைபாடே காரணம். தேவையான ஊழியர்கள், பணியாளர்கள் இல்லை. உலக வங்கியின் நிபந்தனை மற்றும் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் பணியாளர்களை, ஊழியர்களை நியமிப்பதில், திட்டமிடுவதில், நிதி ஒதுக்கீடு செய்வதில் உள்ள பிரச்சனைகள் காரண மாக மக்களுக்கு அடிப் படைத் தேவையான குடி நீரை கூட முறையாக வழங்க முடியவில்லை. எனவே குடிநீர் வடிகால் வாரியம் சரியான திட்ட மிடலும் நிதிஒதுக்கீடும் பணி யாளர்கள் நியமனமும் செய்ய வேண்டும் என்றார்.

    மேலும் திருவொற்றி யூர் மண்டலம் முழு வதும் பல்வேறு பகுதி களில் பாதாள சாக்கடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் தெருக் களில் பக்க கால்வாய்களில் கழிவுநீர் விடப்படுகிறது. அக்கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. அடைப்புகளை அகற்ற ஊழி யர்கள் இல்லை. எனவே 4ஆவது வார்டில் வி.பி. நகர், ராமநாதபுரம், எர்ணா வூர், ஜோதிநகர் போன்ற பகுதிகளில் உடனடியாக பாதாள சாக்கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    எர்ணாவூர் உயர்நிலைப் பள்ளி, ராமநாதபுரம் நடு நிலைப் பள்ளி துவக்கப் பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களின் பணிநேரம் 1 மணிக் கெல்லாம் முடிவதாக கூறப்படுகிறது. ஆனால் 4 மணி வரை பள்ளி செயல்படுகிறது. பிற்பக லில் கழிவறை சுத்தப் படுத்தாமல் இருக்கிறது. எனவே கூடுதல் ஊழியர்கள் நியமிக்க வேண்டும்.

    தெருவிளக்கு பிரச்சனை மிக நீண்ட காலத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயம் பிப்ரவரி மாதம் விடப்பட்ட டெண்டர் ஒப்பந்ததாரர் இது வரை பணியை துவங்க வில்லை. உடனடியாக பணி களை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

   பின்னர் பதிலளித்த மண்டல அலுவலர் உரிய  நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றார்.