districts

ஜூலை முதல் டிசம்பர் வரை திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்

திருவண்ணாமலை, ஜூன் 9-

     திருவண்ணாமலைக்கு வருகிற ஜூலை முதல் டிசம்பர் வரைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறி வித்துள்ளது.

     திருவண்ணாமலையில் மலையை சுற்றி வருவதற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி  மாவட்டங்கள், வெளி மாநிலங்களி லிருந்து லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.  

    இதனால், திரு வண்ணாம லையிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று பக்தர்கள்  நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். சமீபத்தில் திருச்சி யில் நடந்த தெற்கு ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை வலி யுறுத்தி பேசினார்.

   அதனைத்தொடர்ந்து, ஜூலை முதல் டிசம்பர் வரை பவுர்ணமி நாட்களில் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டு தெற்கு ரயில் நிர்வாகம் கால அட்டவணை வெளியிட்டுள்ளது.

   அதன்படி சென்னையிலிருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை வரும் ரயில் பவுர்ணமி நாளன்று திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல் சென்னையிலிருந்து விழுப்புரம் வரும் ரயில் அங்கி ருந்து திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

   இந்த சிறப்பு ரயில்கள் ஜூலை 2 மற்றும் 3 ஆம்தேதிகள், 30 மற்றும் 31 ஆம் தேதிகள், ஆகஸ்டு 30 மற்றும் 31, செப்ட ம்பர் 28 மற்றும் 29, அக்டோபர் 27 மற்றும் 28 , நவம்பர் 26 மற்றும் 27, டிசம்பர் மாதத்தில் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் இயக்கப்படவுள்ளது. இந்த தகவலை தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.