உலக இதய தினத்தை முன்னிட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக செஞ்சிலுவை சங்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் சந்திரமௌலி மண்டல ஒருங்கிணைப்பாளர் தி. ராஜ் பிரவீன், அண்ணாமலை நகர் பேரூராட்சித் தலைவர் கே. பழனி, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சண்முகம், கடலூர் அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் எஸ் கலாவதி கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் கே லாவண்யா குமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.