சிதம்பரம், மே 12-
சிதம்பரம் அருகிலுள்ள அண்ணாமலைநகர் சிறப்புநிலை பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்குக் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பேரூராட்சிமன்றத் தலைவர் பழனி துவக்கி வைத்தார்.
ஆராம்பசுகாதர நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியார்களுக்கு ரத்த அழுத்தம், சக்கரை அளவை ஆய்வு செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கோ.பாலமுருகன், துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வேலாயுதம், அன்பரசு, விஜியலட்சுமி, தேவிகா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.