சென்னை, அக். 17- தமிழ்நாட்டில் விண் வெளி ஆராய்ச்சி மற்றும் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களை தொடங்க வேண்டும் என வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி கோரிக்கை விடுத்துள்ளார் இதுகுறித்து அவர் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழ் நாட்டிலும் கேரளத்திலும் ஐஐடி தேசிய கணக்கியல் கல்வி நிறுவனம் என்ஐடி மத்திய பல்கலைக்கழகம் முதலானவை அமைக்கப் பட்டுள்ளன. இவை மட்டு மின்றி கேரளத்தில் விண் வெளி ஆராய்ச்சி கல்வி நிறுவனம் மேலாண்மைக் கல்வி நிறுவனம் என பல் வேறு மத்திய கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் தமிழகத் தின் தூத்துக்குடி மாவட்டத் தில் குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் செயற்கைக் கோள்களை விண்வெளி யில் செலுத்தும் நிலையை துவங்கியுள்ளது. அங்கு இந்திய மாணவர்களை விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்திய செயற் கைக்கோள் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதன் மூலம் மாணவர் களுக்கு செயற்கைக் கோள்கள் மற்றும் விண் வெளி ஆராய்ச்சி முதலான வற்றில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் சுமார் 1,50,000 மாணவர்கள் பொறியியல் பட்டப்படிப்பு படிப்பதற்காக பொறியியல் கல்லூரிகளில் சேருகின்றனர். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப இயக் குநகரத்திற்கு சுமார் 1,42,867 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். எனவே குலசேகரப் பட்டினத்தில் ஒன்றிய அரசு விண்வெளி ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தை உருவாக்கினால் மிக அதிக அளவில் மாணவர்கள் இக்கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதற்கு வாய்ப்பு உண்டாகும். அதேபோல் தமிழ் நாட்டில் ஏதாவது ஒரு பகுதியில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவ னம் அதாவது ஐஐஎம் கல்லூரியையும் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் தமிழகத்தில் சிறந்த கல்வி நிறுவனங்கள் உருவாகி மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்று அதில் கூறியுள்ளார்.