districts

img

அதிநவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை மையம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, மார்ச் 15- சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்து வமனையில், 34 கோடியே 60 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று (மார்ச் 15) திறந்து வைத்தார்.   நாட்டிலேயே  மாநில அரசு மருத்து வமனைகளில் முதலாவதாக இந்த மையம்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை மையம் வாயிலாக அறுவை சிகிச்சை நிபுணக ளால், கடினமான அறுவை சிகிச்சைகளை மிக துல்லியமாகவும், நுணுக்கமாகவும், ரோபோடிக் கருவிகள் மூலம் மேற்கொள்ள இயலும். லேப்ராஸ்கோபியின் அதிநவீன முன்னேற்றமே ரோபோடிக் அறுவை சிகிச்சையாகும்.   அறுவை சிகிச்சையின் போது உறுப்புகளை அகற்ற நேரிட்டால் அவற்றின்  ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் கட்டுப்படுத் தப்பட வேண்டும். அதன்மூலம் ரத்த இழப்பை தடுத்து பலவீனமடைந்த உறுப்பை  அகற்ற முடியும். அப்படி செய்யும்போது அதன் நரம்பு நாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவற்றை திறம்பட செயல்படுத்த 3 டி விரிவாக்கம் அவசியமாகிறது. அதற்கு இந்த நவீன இயந்திர மனிதவியல் அறுவை  சிகிச்சை உதவும். அறுவை சிகிச்சை நிபுணரின் கைகள் 120 டிகிரி மட்டுமே சுழன்று அறுவை சிகிச்சை  செய்ய முடியும் நிலையில், ரோபோடிக் சிகிச்சையில் உள்ள எண்டோ ரிஸ்ட் மூலம் 360 டிகிரி வரை சுழன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும். மேலும், இதில் 3டி விரிவாக்கம் உள்ளதால் மிக எளிதில் துல்லியமாக நாளங்களின் அமைப்புகளை கண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இயலும். இதில் தொழில் துறை அமைச்சர் தங்கம்  தென்னரசு மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;