விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.முத்து உமய வேலாயுதம்-காந்திமதியம்மாள் பேரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எம்.வி.நக்கீரன்-கனகசுந்தரி மகன் என்.ராஜகுரு-துர்கா தேவி திருமணம் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் வியாழனன்று (ஜன-20) செங்குன்றத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.சண்முகம், மாநில குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், எஸ்.கண்ணன், பி.டில்லிபாபு, டி.ரவீந்திரன், இ.சங்கர், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.சந்தானம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.நடேசன், ஆர்.சித்ரா, ஒன்றிய செயலாளர் ஜி.வி.எல்லையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.