districts

img

கீல்வாத வலிக்கு சிறப்பு மென்பொருள் மூலம் தீர்வு

சென்னை, மே 21 - கீல்வாதத்தால் ஏற்படும் வலியால் அவதிப்பட்டு வந்த பிரிட்டனை சேர்ந்த 62 வயதான ஒருவருக்கு ஒட்டுமொத்த இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இதற்காக   தங்கள் மொபைலில் ஒரு சிறப்பு  மென்பொருளைப் பயன்படுத்தினர். கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள மைக்கேல் மெக்கென்னா -வுக்கு முழு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும், ஆனால் அறுவை சிகிச்சை யானது அவரது அன்றாட செயல்பாட்டை மோசமாக பாதித்து,  அவர் தொடர்ந்து நடமாடுவதை  கடினமாக்கும் என்றும் பிரிட்டனை  சேர்ந்த மருத்துவர் கள் கூறினார்கள். இதையடுத்து அவர் சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களை அணுகியபோது, அவருக்கு “உயர் செயல்திறன்” இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.  அறுவை சிகிச்சை நிபுணர்கள் செயற்கை மூட்டினை சரியான இடத்தில் துல்லியமாக பொருத்த புதிய மென் பொருளை உருவாக்கியுள்ளனர்.  இது மருத்துவருக்கு உதவி செய்வதோடு தவறுகளை குறைக்கவும் உதவு கிறது.  இந்த அறுவை சிகிச்சைகளின் முடிவுகள் ரோபோடிக்  இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு இணையானவை” என்று மருத்துவமனையின் மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜய் சி போஸ் கூறினார்.  அறுவை சிகிச்சை முடிந்து 15 நாட்கள் கழித்து  மெக்கன்னா  ஊன்றுகோல் உதவியுடன் செய்தியாளர்களை சந்தித்தார். “தாம் தற்போது உடல் நலத்துடன் இருப்பதாகவும் புதன்கி ழமை பிரிட்டன்  திரும்ப உள்ளதாகவும் அவர்  கூறினார்.