சிதம்பரம், ஜூன் 6- சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திங்களன்று (ஜூன் 6) வருகை தந்தார். அவரை தீட்சிதர்கள் வரவேற்றனர். பின்னர், கனகசபையில் ( சிற்றம்பல மேடை) ஏறி நடராஜரை தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, கோவிந்தராஜ பெருமாள் கோயில், ஆயிரங்கால் மண்டபத்திற்கும் சென்றார். அப்போது, கோயிலின் நிர்வாகம் எப்படி நடைபெற்று வருகிறது, கோயில் பூசைகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபுவிற்கு தீட்சிதர்கள் விளக்கமளித்தனர். இந்து சமய அறநிலைத்துறை ஆய்வு செய்வதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து விளக்கம் கொடுத்த னர். ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்தும் இந்து சமய அறநிலையத் துறையின் திட்டங்கள் குறித்தும் அமைச்சர் விளக்கி கூறினார். இதனால் கோயிலுக்கு ஆய்வு செய்ய வரும் குழுவிற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தீட்சிதர்களின் கோரிக்கைகள் குறித்தும் அரசின் நிலைப் பாடு குறித்தும் பகிர்ந்து கொண்டோம். இந்து அறநிலையத்துறை சட்டதிட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து செல்வோம். சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமாக நல்ல ஒரு சுமுக தீர்வு ஏற்படும்” என்றார்.