districts

சென்னையில் ஸ்மார்ட் சாலைகள்

சென்னை, ஜூலை 2-  சென்னையில் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள்  நடைபாதை, சைக்கிள் பாதை, வாகன  நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப் பட்டு ஸ்மார்ட் நகரப்புற சாலைகளாக மாறுகிறது. சென்னை மாநகரில் 186 கி.மீ நீளம்  கொண்ட சாலைகள் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில்,  அண்ணாசாலை, காமராஜர் சாலை, வால்டாக்ஸ் சாலை, வேளச்சேரி பைபாஸ் சாலை, எண்ணூர் நெடுஞ் சாலை, ஜிஎஸ்டி சாலை, ஜிஎன்டி சாலை, ஜிடபிள்யுடி சாலை, தரமணி இணைப்பு சாலை உட்பட 16 சாலை கள் அடக்கம். இந்த சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தினமும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலை களை பயன்படுத்துவதாக நெடுஞ் சாலைத்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, இந்த சாலைக ளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் இவற்றை ‘ஸ்மார்ட் நகர்ப்புற  சாலை’களாக மாற்ற நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. முதற்கட்ட மாக, சென்னை மாநகரில் 103.5 கி.மீ தூரம் கொண்ட 7 சாலைகளை ஸ்மார்ட் நகர்ப்புற சாலைகளாக மாற்ற  திட்டமிட்டுள்ளது. இதற்காக, கிராண்ட் சதர்ன் ட்ரங்க் (ஜிஎஸ்டி) சாலை, கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் (ஜிடபிள்யூடி) சாலை,  கிராண்ட் நார்தர்ன் ட்ரங்க் (ஜிஎன்டி) சாலை, உள்வட்ட சாலை, வேளச்சேரி பைபாஸ் சாலை, மர்மலாங் பாலம் - இரும்புலியூர் சாலை, மவுண்ட் பூந்தமல்லி - ஆவடி சாலை ஆகியவை  ஸ்மார்ட் சாலைகளுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளன. தற்போது, இதற்கான விரி வான திட்ட அறிக்கையை தயாரிப் பதற்காக ஆலோசகர் நியமிக்கப்பட  உள்ளார். இதற்காக, நெடுஞ்சாலைத் துறை சார்பில், ரூ9 கோடி செலவில் டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், அவற்றை இறுதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.