சென்னை,பிப்,20- ஆந்திர மாநில அரசு சார்பில் மார்ச் 5, மற்றும் 6 -ம் தேதிகளில் விசாகப்பட்டிணத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வ தற்காகவும், ஆந்திராவில் முதலீடு செய்யவும் தமிழ்நாட்டின் முதலீட்டா ளர்களை அழைக்க சென்னையில் முதலீட்டா ளர்கள் சந்திப்பை ஆந்திரப் பிரதேச மாநில அரசு நடத்தியது. இந்தச் சந்திப்பில் ஆந்திரப் பிரதேசத் தின் நிதி அமைச்சர் புக்கனா ராஜேந்திரநாத் கலந்துகொண்டார். கலந்துகொண்டு அவர் பேசுகையில், “இந்தியாவிலேயே தொழில் வளம் சிறந்து விளங்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலை வகித்துவருகிறது. ஆந்திரப் பிரதேசத்திற்கும், தமிழ் நாட்டுக்கும் பாரம்பரியமான வரலாற்று பிணைப்பு உள்ளது. மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது ஆந்திராவும், தமிழகமும் ஒன்றாகத்தான் இருந்தது. அப்போதிருந்தே பிணைப்பு தொடர்கிறது. இதனால் பன்முகத்தன்மையில் இரு மாநிலங்களுக்கும் ஒற்றுமை இருக்கிறது. இந்தப் பிணைப்போடு சேர்த்து பொரு ளாதார நடவடிக்கைகளுக்கான பிணைப் பையும் வலுவாகப் பலப்படுத்த வேண்டும். கடல்சார் தொழில், சுகாதாரம், வேளாண்மை, உற்பத்தி, எலெக்ட்ரானிக், ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆந்திரா வும் தமிழ்நாடும் இணைந்து செயல்பட்டால் மிகப்பெரும் வளர்ச்சியை நீண்ட காலத் துக்கு நம்மால் கொண்டுசெல்ல முடியும். வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வலுவான கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம்.
எனவே முதலீடு செய்வதற்கான வாய்ப்பு கள் பெருகியிருக்கின்றன. தொழில் செய்ய ஏற்ற சூழல் என்ற வகையிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. தமிழக முதலீட்டா ளர்களை ஆந்திராவில் முதலீடு செய்ய அழைக்கிறோம்.சிறு, குறு,நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம், அந்த தொழில்கள் தான் நாட்டின் பொருளா தாரத்தின் முதுகெலும்பாக உள்ளது” இவ்வாறு அவர் பேசினார். தமிழக முதலீட்டாளர்கள் சந்திப்பில் ஆந்திரப் பிரதேசத்தின் நிதி அமைச்சருடன் பிற துறைகளின் முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர். தொழில்கள், உள்கட்டமைப்பு, முதலீடு ஆகிய துறை களின் சிறப்பு முதன்மை செயலாளர் கரிகால் வளவன், கைத்தறி மற்றும் ஜவுளி முதன்மை செயலாளர் கே.சுனிதா, தகவல் தொழில்நுட்பம் மின்னணு துறை சிறப்புச் செயலாளர் பி.சுந்தர், ஆந்திர கடல்சார் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷான் மோகன், தொழில்துறை இயக்குநர் ஸ்ரீஜனா கும்மால்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.