தமிழ்நாடு பத்திரிகை மற்றும் ஊடகப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் மாநில பொதுச்செயலாளர் பா.கோபாலகிருஷ்ணன் தலைமையில் தாம்பரத்தில் சனிக்கிழமையன்று (மே 27) நடை பெற்றது. இதில் தாம்பரம் மாநகர மேயர் க.வசந்தகுமாரி, துணைமேயர் கோ.காமராஜ், மாநிலத்தலைவர் ச.இசைக்கும்மணி, முன்னாள் செய்தி மக்கள் தொடர்பு உதவி இயக்குநர் ஜீவா மணிகுமார், சங்கத்தின் செயல் தலைவர் நந்திவரம் பா.சம்பத்குமார், தீக்கதிர் உதவி ஆசிரியர் ம.மீ.ஜாபர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.