நினைவு நாளில் பராமரிக்கப்படாத சிங்காரவேலர் சிலை
சென்னை, பிப். 11 – சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலரின் சிலையை நினைவு நாளன்று பராமரித்து, அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யாத அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விடுதலைப் போராட்ட வீரர், தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட், மே தினத்தை முதன் முதலில் இந்திய மண்ணில் அறிமுகப்படுத்தியவர் என பல்வேறு சிறப்புகளை கொண்டவர் சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 1998ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் சிங்காரவேலர் சிலை நிறுவப்பட்டது. ம.சிங்காரவேலர் நினைவு தினமான ஞாயிறன்று (பிப்.11) இந்த உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வந்தார். ஆனால், சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. சிலையின் மீது காய்ந்து கருகிக் கிடக்கும் மாலையை கூட அகற்றாமல், சிலையை சுத்தம் செய்யாமல் வைத்திருந்தனர். மார்க்சிஸ்ட் கட்சியினர் சிலையை சுத்தம் செய்து மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக நிர்வாகத்தின் இந்த செயல்பாடு கடும் கண்டனத்துக்குரியது. இதற்கு காரணமானவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கால்நடை உரிமையாளர்களுக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
அம்பத்தூர், பிப்.11- திருவேற்காடு பகுதி களில் கால்நடைகளை சுற்றித்திரிய விடக்கூடாது என்று அவற்றின் உரிமை யாளர்களை நகராட்சி ஆணையர் கணேசன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து நக ராட்சி ஆணையர் கணே சன் சனிக்கிழமை வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில். திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் சாலைகளில் கால்நடைகளை திரிய விடக்கூடாது. தடையை மீறினால் பொது சுகாதார சட்டம் 1939இன் படி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிப்படி சாலையில், சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமை யாளருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்தாத உரிமையாளர்களின் கால்நடைகளை, அவற்றை பிடித்த நாளில் இருந்து 3ஆவது நாளில் பகிரங்கமாக பொது ஏலம் விடப்படும். எனவே கால்நடை உரிமை யாளர்கள் பொதுமக்க ளுக்கு தொந்தரவின்றி, தங்களது மாடுகளை பராமரித்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்றத் தலைவர் கையாடல்: ஆட்சியர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
சென்னை,பிப்.11- எந்தப் பணிகளையும் மேற்கொள்ளாமல், போலியாக கணக்கு காட்டி ரூ.2.48 கோடி முறைகேடு செய்ததாக இச்சி புத்தூர் ஊராட்சித் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், ராணிப்பேட்டை ஆட்சி யர் மற்றும் அதிகாரிகள் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், பெரிய ஈசலாபுரத்தைச் சேர்ந்த எம்.ராமச்சந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:- அரக்கோணம் வட்டத்துக்கு உட்பட்ட இச்சிபுத்தூரில் மின் விளக்குகள், ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தது, பம்பு செட் அமைத்துக் கொடுத்தது என செய்யாத வேலை கள் செய்ததாக போலியாக கணக்கு காண்பித்து, ஊராட்சி மன்றத் தலைவர் பத்மநாபன் மற்றும் ஊராட்சி செய லாளர் இப்ராஹிம் ஆகியோர் ரூ.2.48 கோடி முறை கேடு செய்துள்ளனர். ஆனால், எந்தப் பணியும் நடைபெற வில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சிகளின் உதவி இயக்கு நர், அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகி யோரிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, அரசுப் பணத்தை முறைகேடு செய்த இச்சிபுத்தூர் ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும். ஊராட்சித் தலை வரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு மனு வில் கோரியிருந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது அரசுத் தரப்பில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது. இந்நிலையில், புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் குமார், அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் சவுந்தர ராஜன் ஆகியோருக்கு எதிராக ராமச்சந்திரன், நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி ஆஜராகி, “எந்த வேலையும் செய்யாமல் போலியாக கணக்கு காண்பித்து ரூ.2.48 கோடி முறைகேடு செய்துள்ள னர்” என்று கூறி, அதற்கான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார். மேலும், மனுதாரர் தாக்கியதாகவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து நீதிபதி, “இந்த வழக்கில் ராணிப்பேட்டை ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வரும் 19 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசார ணையை தள்ளி வைத்தார்.
சர்வதேச திரைப்பட நகர மேம்பாட்டு பணியில் சிபிஆர்இ சவுத் நிறுவனம்
சென்னை, பிப்.11- நொய்டாவில் உள்ள சர்வதேச திரைப்பட நகர மேம்பாட்டு திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான ஏலம் சமீபத்தில் விடப்பட்டது. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நொய்டாவை சேர்ந்த பூட்டானி குழுமத்துடன் இணைந்து இந்த ஏலத்தை எடுத்துள்ளார். இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான சிபிஆர்இ சவுத் ஆசியா நிறுவனம் இந்த கட்டுமானம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கும், திட்டத்திற்கான பரிவர்த்தனை ஆலோசனையை மேற்கொள்வதற்கும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தம் 1000 ஏக்கரில் நிர்மாணிக்கப்பட உள்ள இந்த திரைப்பட நகரத்திற்கான முதல்கட்ட பணி 230 ஏக்கரில் துவங்குகிறது. இந்த பணிகள் முழுவதும் வரும் 2028-2029ம் நிதி ஆண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.