போதை ஒழிப்பை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை ஞாயிறன்று (பிப்.12) தொடங்கினர். இதன் ஒருபகுதியாக தென்சென்னை மாவட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், தொமுச பொருளாளர் கி.நடராஜன் ஆகியோர் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், பொருளாளர் திவாகர், மாநிலக்குழு உறுப்பினர் அ.ஜானகிதேவி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.