திருவண்ணாமலை, நவ.20- பட்டியலின மக்களின் கோரிக்கை களை வலியுறுத்தி டிச.4 ஆம் தேதி டெல்லியில் பேரணி நடைபெறுகிறது. இந்த கோரிக்கைகளுக்கு ஆதரவாக ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடை பெறுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் திரு வண்ணாமலை மாவட்டத்தில் 2.5 லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம், வந்தவாசி கோட்டை மூலையில் துவங்கியது. கா.யாசர் அராபத் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு எஸ்.சி,எஸ்.டி அலுவலர் நல சங்க மாநில ஆலோசகர் பி.நடராசன், முன்னணியின் மாநில துணை பொதுச் செயலாளர் ப.செல்வன் ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வந்தை மோகன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத் தலைவர் பெ.அரிதாசு, எஸ்.சி,எஸ்.டி அலுவலர் நல சங்க மாவட்ட நிர்வாகிகள் எம்.சந்திரசேகரன், டி.குணசேகரன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் அ.அப்துல்காதர், சு.சிவக்குமார், இரா.சேட்டு உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.