districts

img

நீதிமன்ற உத்தரவை காட்டி பணி வழங்க மறுப்பதா ? மதுராந்தகத்தில் வியாபாரிகளை கண்டித்து பொதுக்கூட்டம்

மதுராந்தகம், மார்ச் 12- நீதிமன்ற உத்தரவை காட்டி பணி வழங்க மறுக்கும் மதுராந்தகம் நகர வியா பாரிகளையும், துணைபோகும் காவல் துறையினரை கண்டித்து சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில்  ஊர்வலம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்க ளுக்கு மீண்டும் பணி வழங்கிட வலி யுறுத்தியும் தொடர்ந்து அடாவடித்தனமாக செயல்பட்டுவரும் ஒருசில வியாபாரிகளை கண்டித்தும் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மதுராந்தகம் தேரடி வீதியில்  சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கண்டன ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம்  நடைபெற்றது. சுமைப்பணி சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி சுமைப்பணி சங்கத்தின் கவுரவத் தலைவர் டி.கிருஷ்ணராஜ், மாவட்டத் தலைவர் ஆர்.நடராஜ், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி, மாவட்ட செயலாளர் க.பகத்சிங்தாஸ், மார்க்சிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட பொரு ளாளர் எம்.ரமேஷ், போக்குவரத்து மத்திய சங்க நிர்வாகி இ.கோவலன்,  உள்ளிட்ட பலர் பேசினர். பொதுக்கூட்டத்தை நிறைவு  செய்து சுமைப்பணி மாநில சம்மேளனத்தின்  பொதுச் செயலாளர் ஆர்.வெங்கடபதி பேசினார்.