districts

மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 14- சென்னை மெரினாவில் உள்ள கடைகளை முறைப்படுத்தி இயங்கு வதற்கான விதிகளை வகுக்க மாநகராட்சி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை மெரினா கடற்கரையை  அழகுபடுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக் கப்பட்ட 900 வியாபாரிகளுக்கு ஸ்மார்ட்  கடைகளை இலவசமாக வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.  அங்கு ஏற்கனவே கடை வைத்திருப் போருக்கு 540 கடைகள், பிற  பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளுக்கு 360 கடைகளை ஒதுக்க முடிவு செய்யப் பட்டு, கடந்த 2020 டிசம்பரில் விண்ணப் பங்கள் பெறப்பட்டன. 14 ஆயிரத்துக் கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த நிலையில், 3,200 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. 2021 ஜனவரியில் நீதிபதி  முன்னிலையில் குலுக்கல் நடத்தப் பட்டு, 900 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஒதுக்கீடு ஆணையும் வழங்கப்பட்டது. இவர்களுக்கு வழங்குவதற்காக உலோகத்தால் ஆன, உறுதியான, தரமான 900 ஸ்மார்ட் கடைகளை தலா  சுமார் ரூ.1.50 லட்சம் விலையில் மாநக ராட்சி வாங்கியது. இந்த சூழலில், மெரினாவில் ஏற்கெனவே கடை வைத்திருக்கும் 1,600 பேரும் தொடர்ந்து  கடை வைக்க அனுமதிக்க கோரியும், மீனவர் அல்லாதோர் கடை வைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் இன்னும் ஸ்மார்ட் கடைகளை வாங்காமல் உள்ளனர். இதனால் ஸ்மார்ட் கடை கள் பழுதாகி வருகின்றன. இந்நிலை யில், இவற்றை ஆக்கப்பூர்வமாக பயன் படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக  திங்களன்று நடை பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முதலில் அடையாளம் காணப்பட்ட 365  பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது, உணவு வகைகளை விற்பனை செய்வோருக்கு முன்னு ரிமை அளித்து கடைகளை வழங்கு வது, கடை அமைவிடங்கள் அடையா ளம் காண்பது, சச்சரவு இல்லாமல் அமைதியான முறையில் கடைகளை ஒதுக்கீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

;