districts

img

செவலபுரையில் வீடுகள் இடிப்பு: அரசு அலுவலகத்தில் மக்கள் தஞ்சம்

செஞ்சி, ஜூலை 26- விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத் திற்குட்பட்ட செவலபுரை கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில் 93 பேர் வீடு கட்டி குடியிருந்து வரு கின்றனர். நீதிமன்ற உத்த ரவை காட்டி இந்த வீடு களை இடிப்பதற்கு வரு வாய் துறை மற்றும் வட்டார  வளர்ச்சி துறை அதிகாரிகள் வந்தனர். உதவிக்கு காவல்துறை அழைத்து வந்தனர். மாற்று இடம் வழங்காம லும் உடமைகளைக்கூட எடுத்து வைக்க போதிய கால  அவகாசம் வழங்காமலும் இரவோடு இரவாக வீடு களை அனைத்தையும் இடித்து தரமட்டமாக்கினர். சாப்பாட்டுக்கும் குடிப்ப தற்கு தண்ணீர்கூட கொடுக்காமல்  நடுத்தெரு வில் நிறுத்திவிட்டனர். இந்த நிலையிலும் பலத்த மழையும் கொட்டித் தீர்த்தது. ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் அல்லப்பட்ட அந்த மக்கள், குழந்தைகள், உடைமைகளுடன் மேல் மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா ளர் டி.முருகன் தலைமை யில் தஞ்சம் புகுந்தனர். பிறகு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் மாற்று இடத்தை எந்திரங்களை கொண்டு சரி செய்து மூன்று  நாட்களுக்குள் வழங்கப் படும் என்றும் அதுவரைக் கும் ஊராட்சி சார்பில் உணவு வழங்கப்படும் என்றும் உறுதிகொடுத்தனர். இதனை தொடர்ந்து போராட் டத்தை கைவிட்டனர்.