districts

img

மாற்று இடம் வழங்காமல் குடிசைகளை அப்புறப்படுத்தக் கூடாது! சென்னை மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, ஜன. 2- சென்னை திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதிக்குட்ட பகுதி யில் மாற்று இடம் வழங்காமல்  குடியிருப்புகளை அப்புறப்படுத் தக் கூடாது என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. சென்னை திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதி, 74ஆவது வட்டத்தில், டேங்க் ஃபண்ட் ரோடு, ராஜீவ்காந்தி நகர், ஏகாங்கிபுரம், சேமாத்தம்மன் காலனி ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (ஜன. 2) மாவட்டச்  செயலாளர் எல். சுந்தர்ராஜன் தலை மையில் மனு அளித்தனர். பகுதிச் செயலாளர்  வி.செல்வராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் பா.தேவி, பகுதிக்குழு உறுப்பினர் கள் சுப்பிரமணி, சுரேஷ், வினோத் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மனுவின் விவரம் வருமாறு:- திரு.வி.நகர் சட்டமன்ற தொகு திக்குட்ட பகுதியில் 60 ஆண்டுக ளுக்கு மேலாக சுமார் 940 குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த  8 மாதங்களுக்கு முன்பு ரயில்வேக்கு  சொந்தமான இடம் என்றும் உடனடி யாக காலி செய்ய வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ்  அனுப்பியது. அப்போது, மாற்று  இடம் கொடுக்காமல் அப்புறப்படுத் தக் கூடாது என்று சிபிஎம் சார்பில்  கோரிக்கை விடுத்தோம். இதைய டுத்து, அப்புறப்படுத்தும் பணிகளை  நிறுத்தி வைத்தனர். வாழ்நாள் முழுவதும் சேமித்த பணத்தில் கஷ்டப்பட்டு வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு, மாற்று  குடியிருப்பு வழங்காமல் ரயில்வே  நிர்வாகமும், அரசும், குடியிருப்பு களை அகற்றும் முயற்சியை கைவிட வேண்டும். திடீரென அப் புறப்படுத்தினால் குழந்தைகளின் படிப்பு, வாழ்வாதாரம் பாதிக்கப் படும். மே 6ஆம் தேதி இந்த பகுதி  மக்கள் முதலமைச்சரை சந்தித்த போதும், இந்த இடம் தண்டவா ளம் அமைப்பதற்கோ, அலுவல கம் கட்டுவதற்கோ பயன்பட வில்லை. எனவே, அந்த இடத்தை  குடிருப்பவர்களுக்கே உறுதிப் படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை  வைத்தனர். முதல்வரும் பரிசீலிப் பதாக தெரிவித்தார். இந்நிலையில், நியூ டேங்க்  ஃபண்ட் ரோடு மற்றும் ராஜீவ்காந்தி நகரில் வீடுகளை அப்புறப்படுத்து வதாக ரயில்வே நிர்வாகம்  அறிவித்துள்ளது.  எனவே ஒன்றிய அரசும், ரயில்வே நிர்வாகத்திற்கு அறிவுறுத்த  வேண்டும். ரயில்வே நிர்வாகம் அந்த மக்களை அப்புறப்படுத்த முயற்சித்தால் தமிழக அரசு அவர்க ளுக்கு மாற்று இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.