மாணவியை தற்கொலைக்கு தூண்டிய கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க எஸ்எப்ஐ வலியுறுத்தல்
சென்னை, அக். 29 - அதிக கல்விக் கட்டணம் வசூலிப்பதை கேள்வி கேட்ட மாணவியை தற்கொலைக்கு தூண்டிய குருஞானக் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தென் சென்னை மாவட்டத் தலைவர் ச.ஆனந்தகுமார், செயலாளர் ரா.பாரதி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை வேளச்சேரியில் அரசு உதவி பெறும் கல்லூரி குருநானக் கல்லூரி செயல்படுகிறது. இங்கு அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில், நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. இதற்கெதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதோடு, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். இதற்கிடையில் இளங்கலை பொருளாதாரம் 3ஆம் ஆண்டு பயிலும் மாணவி லோகேஸ்வரி, நிர்ண யிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூ லிப்பதை குறைக்க வேண்டும் என்று கோரினார். இதற்காக பழிவாங்கும் நோக்கில் தேர்வு நுழைவுச்சீட்டு தராமல் அவரை கல்லூரி நிர்வாகம் அலைக்கழித்தது. கல்லூரி கல்வி இயக்குநரை சந்தித்து புகார் அளித்த பிறகும், கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி லோகேஸ்வரி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதற்கு காரணமான கல்லூரி நிர்வாகத்தின் மீது அரசும், உயர்கல்வி துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
சென்னை, அக்.29- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அக்.31, நவ.1, 2 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
அறந்தாங்கி, அக்.29 - அறந்தாங்கி ஆட்டுச் சந்தையில் செவ்வாயன்று மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை நடைபெற்று உள்ளதாக ஆட்டு வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் கோழிகளும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன. அதிகாலையிலேயே மாவட்டத்தின் பல்வேறு பகுதி யில் இருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ரூ.27 கோடி மதிப்புள்ள மெத்தா பெட்டமைன் பறிமுதல்: இருவர் கைது
சென்னை,அக்.29- சென்னையில் ரூ.27 கோடி மதிப்புள்ள 2.7 கிலோ மெத்தா பெட்டமைன் போதைப்பொருளை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்கள் நின்று கொண்டிருந்த நபர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர் போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, கன்னியாகுமரி மாவட்டம், புலம்பெயர்ந்தோர் முகாமில் வசித்து வரும் இலங்கையைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன் என்பது தெரியவந்தது. மேலும், விஜயகுமார் என்பவர் இந்த போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், மணிவண்ணனிடம் நடத்தப்பட்ட விசாரணை யில், அவரது வீட்டில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருப் பது தெரியவந்ததை அடுத்து, அவரது வீட்டில் சோதனை செய்து சுமார் 900 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.இதையடுத்து, இருவரிட மும் இருந்து சுமார் 2.700 கிராம் போதைப பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ27 கோடி என கூறப்படுகிறது. மேலும், 15 லட்சம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆச்சரியத்தில் மூழ்கடிக்கப் போகும் அறிவியல் பூங்கா
சென்னை, அக்.29- பெரம்பூரில் அமைக்கப்படும் முரசொலி மாறன் அறிவி யல் பூங்கா விரைவில் திறக்கப்படவுள்ளது. விண்வெளியில் மிதப்பது போன்ற சுவாரஸ்ய அனுபவங்களை அளிக்கும் இந்த பூங்கா பயன்பாட்டுக்கு வந்தால் மாணவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து விடுவார்கள், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றில் மாணவ, மாணவிகளுக்கு ஆர்வத்தை தூண்டும் அறிவார்ந்த புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள வசதியாக, பெரம்பூரில் முரசொலி மாறன் அறிவியல் பூங்கா ஒன்று அமைக்கப்படுகிறது. இதை ஸ்டெம் பார்க் என்று அழைக்கின்றனர். இதில் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் விஷயம் விண்வெளி சார்ந்த விஷயங்கள்தான். உள்ளே சென்றதும் விண்வெளியில் மிதப்பது போன்ற அனுபவம், சுற்றிலும் கோள்கள் சுற்றி வரும் காட்சிகள், இங்கும் அங்கும் சுற்றி வரும் செயற்கைக் கோள்கள், மிதக்கும் விண்வெளி நிலையம், நட்சத்திர கூட்டங்களை காண உதவும் டெலஸ்கோப் ஆகிய விஷயங்களை கற்பனை செய்து பார்க்க லாம். குறிப்பாக இஸ்ரோவின் சந்திரயான், மங்கள்யான் உள்ளிட்ட செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட்கள் எப்படி செயல்படுகின்றன, உள்ளிருக்கும் தொழில்நுட்ப அம்சங்கள் என்னென்ன போன்றவற்றுக்கு மிகவும் நுணுக்கமான முறையில் விளக்கம் அளிக்க உள்ளன. இதுதவிர ரோபோ கார்கள், மினி ஹூமனாய்டுகள் ஆகிய வற்றை கண்டும், பயன்படுத்தியும் பார்க்கலாம். இதற்கென பிரத்யேகமாக கணினி ஆய்வகம் ஒன்று அமைக்கப்படு கிறது. இத்தகைய அனுபவங்களை வழங்கும் வகையில் இந்த அறிவியல் பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை ரூ.5 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இன்று 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்
சென்னை, அக்.29- தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை ஒட்டி சென்னையில் 3.5 நிமிடங்க ளுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை மெட்ரோ நிர்வா கம் வெளியிட்டுள்ள அறிக் கையில், தற்போது 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணி களின் வருகைக்கு ஏற்ப கூடு தல் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், தீபா வளியை உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு பயணிகள் செல்லும் வசதி யாக புதன்கிழமை (அக்.30) மெட்ரோ ரயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படு கிறது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெரினாவில் ரோப் கார் வசதி: மேயர் பிரியா தகவல்
சென்னை, அக். 29 - மெரினா கடற்கரையில் விரைவில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என்று மேயர் ஆர்.பிரியா தெரி வித்தார். பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் செவ்வாயன்று (அக்.29) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் பேசிய உறுப்பி னர் செம்மொழி, மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றார். அதற்கு பதில் அளித்த மேயர், இது தொடர்பாக ஏற்கெனவே அமைச்சரிடம் ஆலோசனை செய்திருப்ப தாகவும் , இதற்கு ஒப்பந்த புள்ளி கோரக்கூடிய பணி கள் நடைபெற்று வருவதாக வும், விரைவில் ரோப் கார் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
புதியபாலம் திறப்பு
சென்னை, அக்.29- ஆலந்தூா் மண்டலத்துக் குட்பட்ட ஜீவன் நகரில் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலத்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பர சன் திறந்து வைத்தார். 161-ஆவது வார்டுக்குட் பட்ட ஜீவன் நகா் 2-ஆவது தெருவையும், மேடவாக்கம் பிரதான சாலையையும் இணைக்கும் வகையில் ஆதம்பாக்கம் ஏரிக்கால்வா யின் குறுக்கே ரூ.5 கோடி மதிப்பில் அணுகுசாலை உட்பட 76 மீட்டா் நீளத்தி லும், பாலத்தின் இருபுறமும் நடைபாதை உட்பட 11.50 மீட்டா் அகலத்திலும் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு சிஐடியு முயற்சியால் போனஸ்!
சென்னை, அக். 29 - மெட்ரோ ரயிலில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட் டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 300க்கு மேற்பட்ட நிரந்தர தொழிலாளர் கள் பணியாற்றி வருகின்றனர். பொதுத் துறை நிறுவன தொழிலாளர்களுக்கு அரசு போனஸ் வழங்கி வந்தாலும், மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்களுக்கு கடந்தாண்டு வரை போனஸ் வழங்கப்பட வில்லை. இந்நிலையில், மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் எம்ப்ளாயீஸ் யூனியன் (சிஐடியு) தலைவர் அ.சவுந்தரராசன் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பினார். இதனையடுத்து முதன்முறையாக மெட்ரோ ரயில் நிர்வாகம் நிரந்தர ஊழியர்களுக்கு ரூ.15 ஆயிரம் போனஸ் அறிவித்துள்ளது. இதன்படி, 2023 - 2024 நிதியாண்டில் குறைந்தது ஆறு மாதம் பணியாற்றிய தொழிலாளர்கள் போனஸ் பெற தகுதியானவர்கள். 2023 ஏப்ரல் முதல் மார்ச் 2024 வரை ஒரு நிதியாண்டு முழுமையாக பணியாற்றிய ஊழியர்க ளுக்கு முழு தொகையும் போனசாக கிடைக் கும். 6 மாதங்களுக்கு மேல் பணியாற்றிய வர்களுக்கு விகிதாசார முறையில் போனஸ் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.