districts

img

சிதம்பரம் அரசு கல்லூரியில் எஸ்எப்ஐ போராட்டம்

சிதம்பரம், செப். 14- பேருந்து, குடிநீர், கழிவறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், கூடுதல் வகுப்பறை கட்டி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சிதம்பரம் சி. முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் கிளை நிர்வாகி கார்த்திகேயன் தலைமையில் நடத்திய போராட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆகாஷ், மாநிலக் குழு உறுப்பினர் சவுமியா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாணவர் சங்க நிர்வாகிகள் சிவநந்தினி, சுவாதி, அஜித், ஆகாஷ் மற்றும் 2 ஆயி ரத்திற்கும்  மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.