districts

பேருந்தில் பாலியல் சீண்டல்: வாலிபர் கைது

சென்னை, ஏப். 2 - பேருந்தில் பெண் வழக்கறிஞரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள 28 வயது பெண் கோயம்பேட்டிலிருந்து வேலூர் செல்லும் அரசு பேருந்தில் வெள்ளியன்று  (ஏப்.1) பயணித்தார். பேருந்து வானகரம் அருகே சென்று கொண்டிருந்த போது பின் இருக்கையில் இருந்த வாலிபர் வழக்கறிஞரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார், இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தினார். காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராகவன் (40) என்பவரை கைது செய்து, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

;