districts

மாணவிகளிடம் பாலியல் சீண்டல் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கைது

பள்ளிப்பட்டு,மார்ச் 5 பள்ளிப்பட்டு அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் அவரை பொதுமக்களே பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 43 மாணவ-மாணவி கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பொதட்டூர் பேட்டையை சேர்ந்த ஜெயகோபி (46) என்ப வர் பணியாற்றி வந்தார். இவர் 3-ம் வகுப்பு  படித்து வரும் மாணவிகளிடம் பாலியல்  சீண்டலில் ஈடுபட்டதாக  மாணவிகள் அவர்க ளது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால்,  கோபமடைந்த பெற்றோர் கிராம மக்களுடன் பள்ளிக்கு சென்றனர். அங்கு மாணவிகளிடம் பாலியல் சீண்ட லில்  ஈடுபட்ட ஆசிரியரை அடிக்க முற்பட்ட னர். இது குறித்து தகவல் அறிந்த காவல்  துறையினர் விரைந்து சென்று  பொது மக்களிடமிருந்து ஆசிரியர் ஜெயகோபியை மீட்டனர். பின்னர் அவரை காவல் நிலை யத்திற்கு அழைத்து வந்தனர். அவர் மீது ஜான கிராமன் என்பவர் புகார் கொடுத்தார். புகாரின்  பேரில் வழக்குப்பதிவு செய்த பள்ளிப்பட்டு காவல்துறையினர் ஜெயகோபியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பணி மாறுதல்  ஆகி செல்வதை விரும்பாத பள்ளி மாணவர் கள் மற்றும் பெற்றோர் அவரை இடமாற்றக் கூடாது என்று கதறி அழுது பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பரபரப் பாக பேசப்பட்டது. அப்படிப்பட்ட பள்ளியில் இப்படிப்பட்ட ஆசிரியரும் இருக்கிறாரே என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் பேசிக் கொண்டார்கள்.