கடலூர், ஜூன் 9- கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடை பெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலை வரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவகர் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு வழக்கு களுக்கு சமரச அடிப்படை யில் தீர்வு காணப்பட்டது. இதில் குற்றவியல் நீதித் துறை நடுவர் எண்-1 வனஜா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2 கவியரசன், மாவட்ட நீதிமன்றத்தின் லாயர்ஸ் அசோசியேஷன் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கடலூர் மாவட்ட தாலுகா நீதி மன்றங்களான சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி மற்றும் குறிஞ்சிப்பாடி நீதி மன்றங்களிலும் வெள்ளி யன்று அந்தந்த நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் நடந்த தேசிய மக்கள் நீதி மன்றத்தில் சுமார் 4,596 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 1,430 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.20 கோடியே 45 லட்சத்து 5 ஆயிரத்து 607 வசூலிக்கப்பட்டது.