districts

img

பிச்சாவரத்தில் விடுதி அமைக்க உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு

சிதம்பரம், ஜூ லை. 16-

    சிதம்பரம் அருகே  பிச்சாவரம் வனக்காடு தீவுப் பகுதியில் சுற்றுலாப்  பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் காட்டேஜ் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல்மிஸ்ரா, மாவட்ட கூடுதல் ஆட்சியர் மதுபாலன், சிதம்பரம் உதவி ஆட்சி சுவேதா சுமன் ஆகியோர் படகுமூலம் பிச்சாவரம் வனப்பகுதியில்ஆய்வு மேற்கொண்டனர்.  இவர்களுடன் கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் கிள்ளைரவீந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.  

    இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தில்லையம்மன் ஓடையின் இடது கரையில் ரூ 40 கோடியில் 2. 50 கிலோமீட்டர் வெளிவட்ட இருபுற மாற்று தார்சாலை அமைக்கும் பணிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டனர்.  பின்னர் சிதம்பரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ சேவை மைய செயல்பாடுகள் மற்றும் கீரப்பாளையம் ஊராட்சியில் வசித்து வரும் நரிக்குறவர் சமூக மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்களை 25 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. வேளாண்மை துறையின் மூலம் குருவைச் சாகுபடி திட்டத்தின் கீழ் 7 விவசாயிகளுக்குக் குருவைச் சாகுபடி தொகுப்புகளை வழங்கினார்.  இந்நிகழ்வில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பரந்தாமன், சிதம்பரம் வட்டாட்சியர் வெற்றிவேல் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.