districts

img

சாலையின் நடுவே அமைக்கப்பட்ட தடுப்பை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 28-

     ஆவடி திருமுல்லைவாயில் அம்பேத்கர்  நகர் சிடிஎச் சாலையில் குறுக்கே கம்பி தடுப்பு போட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

   தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் டாக்டர் அம்பேத்கார் நகர், டாக்டர் மூர்த்தி நகர், தென்றல் நகர், வள்ளலார் நகர், ஆரிக்கும்பேடு, மகளிர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு கடந்த 40 ஆண்டுகளாக இந்த  சாலையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் திடீரென விபத்தை காரணம் காட்டி இரும்பு  தடுப்புப் போடப் பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும்  தொழிலாளர்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.

     இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையினருக்கு கடிதம் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தடுப்பை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10ஆவது  வார்டு மாமன்ற உறுப்பினர் ஜான் தலை மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.