districts

img

மூத்த தோழர் கே.தங்கவேல் காலமானார்

கடலூர்,ஏப்.23- கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தாழநல்லூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் கே.தங்க வேல் (வயது 94) சனிக்கிழமை கால மானார். தோழர் கே.தங்கவேல் கடந்த 60 ஆண்டு களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்து பணியாற்றினார். குத்தகை விவசாயிகளுடைய உரிமைக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தி  திட்டக்குடி பகுதி விவசாயிகளுக்கு குத்தகை உரிமையை பெற்றுக் கொடுத்தவர். மறைந்த கே.தங்கவேலின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறு முகம்,  என்.எஸ்.அசோகன், ஜி.ஆர். ரவிச்சந்திரன், திட்டக்குடி வட்ட செய லாளர் வி.அன்பழகன், மாவட்ட குழு உறுப்பினர்கள்ஆ ர்.ராஜேந்திரன், ஆர்.கலைச்செல்வன்,  கூட்டுறவு சங்கத் தலைவர் டி.பன்னீர்செல்வம், மாதர் சங்க மாவட்ட துணை தலைவர் பி.முத்துலட்சுமி, வட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.மாணிக்க வேல், எல்.சுமதி, ஆர்.மாயவேல், விவ சாய தொழிலாளர் சங்க செயலாளர் எம். ராமகிருஷ்ணன், விவசாய சங்க தலை வர்கள் ஆர்.ரவிச்சந்திரன், வாசுதேவன், கிளை செயலாளர் ஜி.ராஜேந்திரன்  உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.