கள்ளக்குறிச்சி, டிச.22- கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியா குமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் அனுப்பி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணா, மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியா ளர் (பொது)யோக ஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.