‘மனித கழிவுகளை மனிதன் அகற்றுவதை தடுத்தல் மற்றும் மறுவாழ்வு சட்டம்-2013’ குறித்து செவ்வாயன்று (டிச 13) சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ச.லெனின் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் வழக்கறிஞர் எஸ்.சரவணன் பேசினார். மாநில துணைப்பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன், மாவட்ட நிர்வாகிகள் ஏ.முருகானந்தம், எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடன் உள்ளனர்.