districts

செம்பரம்பாக்கம் நீர்மட்டம் உயர்வு

சென்னை,ஜூன் 20-

     பலத்த மழை காரண மாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத னால் செம்பரம்பாக்கம் ஏரி யின் நீர்மட்டம் 20 அடியை நெருங்கி உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் தற்போது 19.70 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3465 மில்லியன் கன அடி யில் 2530 மி. கன அடி தண்ணீர் நிரம்பி காணப்படு கிறது. ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதி கரித்த வண்ணம் உள்ளது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதி காரிகள் ஏரியின் நீர்மட் டத்தை தொடர்ந்து கண்கா ணித்து வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங் கும் வரை கண்காணித்து அதன் பிறகு உபரி நீர் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.