திருக்கழுக்குன்றம், ஜூன் 13 - இந்திய நாட்டின் வற்றாத ஜீவநதிகளாக உள்ள பொதுத்துறை சொத்துக்களை பாஜக அரசு தனியாருக்கு விற்க துடிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பி னர் கே.சாமுவேல்ராஜ் குற்றஞ் சாட்டினார். திருக்கழுக்குன்றத்தில் நடை பெற்ற கட்சி நிதியளிப்பு பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இந்தியாவில் வேலையின்மை தலைவிரித்தாடிவருகிறது. இது குறித்து பேச மறுக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர்களும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி வருகிறார். நூல் விலை அதிகரிப்பால் மேற்கு மண்டலத்தில் ஏராளமான தொழி லாளர்கள் வேலை இழந்து பறித வித்து வருகின்றனர். பஞ்சு விலை உயர்வு குறித்து சிறிதும் கவலை படாத ஒன்றிய அரசு பஞ்சை முழுவதும் வெளிநாட்டிற்கு ஏற்று மதி செய்துவிட்டது.இதுபற்றி அண்ணாமலை பேச முன்வருவாரா, சுதேசி பேசிவிட்டு பன்னாட்டு முதலாளிக்கு பல்லக்கு தூக்கும் வேலையை செய்யலாமா. 28 கோடி பாலிசி கொண்ட பிரமாண்டமான எல்ஐசிஐயை ஒன்றிய அரசு தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. தேசத்தையும் மக்களையும் நேசிக்கும் பொதுத் துறை எல்ஐசியை சிதைக்கும் வேலையை ஒன்றிய அரசு செய்து வருகிறது. மேற்கு மண்டலத்தை சார்ந்த லாட்டரி சீட்டு அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான முதல் தனியார் ரயில் தமிழகத்திலிருந்து இயக்கப்படவிருப்பது வெட்கக்கேடானது.
பொதுத்துறை நிறுவனம் இருந்தால் மட்டுமே அனைவருக்கும் வேலை உத்தரவாதம் செய்யப்படும், அனைத்தும் விலையும் கட்டுப் பாட்டில் இருக்கும் மேலாக சமூக நீதி பாதுகாக்கப்படும். ஆனால் ஒன்றிய அரசு வற்றாத ஜீவ நதிகளான பொதுத்துறை நிறு வனங்கள் அனைத்தையும் தனி யாருக்கு விற்பனை செய்து வரு கிறது. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் ஒன்றிய அமைச்சர்கள் பலர் பல கோடிகளை சம்பாதித்து வரு கின்றன. அன்னிய செலாவணி ஈட்டி வருகின்றனர். ஆனால் சாமானியன் மாட்டு இறைச்சி சாப்பிட்டால் கொலை செய்கின்றனர் என்றார். வட்டச் செயலாளர் எம்.குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், கே.வாசுதேவன், வட்டக்குழு உறுப்பினர்கள் எம்.அழகேசன், கே.முரளி, பி.ரபிக், சி.செல்வக்குமார், என்.சுந்தர் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக கட்சியின் வட்டச் செயலாளர் எம்.குமார் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜிடம் கட்சி சார்பில் வசூலிக்கப்பட்ட நிதியை வழங்கினார்.