districts

img

சுயசக்தி விருதுகள் 2022

சென்னை, ஜூன்8- சக்தி மசாலா சுயசக்தி  விருதாளர்களைக் கணடறியும் நடைமுறைகளை தமிழ்நாடு அரசின் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான அமைச்சர்  தா.மோ. அன்பரசன் சென்னையில் தொடங்கி வைத்தார். வீட்டிலிருந்தே பெண்கள் மேற்கொள்ளும் தொழில்முனைவு முயற்சிகளை அங்கீகரிக்க பிராண்ட் அவதார்  நிறுவனம், இவ்விருதை ஏற்படுத்தியுள்ளது. திரைக்கலைஞர் ஆர். ராதிகா சரத்குமார், தமிழ்நாடு புதுமை கண்டுபிடிப்பு அமைப்பின் திட்ட இயக்குநர் சிவராஜா ராமநாதன் ஆகியோர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.  இல்லத்திலிருந்தே சம்பாதிக்கும் பெண்கள், விவசாயம், மருத்துவம், சில்லறை விற்பனை, கலை,  கலாசாரம், விளையாட்டு, ஃபிட்னெஸ்,  உணவு, பானங்கள், டிஜிட்டல், அழகு, ஆரோக்கியம், கல்வி, இலக்கியம்,  ஊடகம், பொழுதுபோக்கு, சமூகநலன், மாற்றுத்திறனாளி, வீட்டுத் தொழில்முறை சேவையாளர்கள், தொழில்நுட்பம் ஆகிய 13 பிரிவுகளின் கீழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். https://homepreneurawards.com / www.suyasakthiawards.com என்ற இணையதளத்தில் சுயசக்தி விருதுக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். கடைசித் தேதி அடுத்தமாதம் 2 ஆம்தேதி  ஆகும்.