விழுப்புரம், ஜூன் 19- தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் ஞாயிறன்று (ஜூன்19) நடைபெற்றது. கூட்டத்திற்கு எம்.பழனி தலைமை தாங்கி னார், கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஆர்.வேங்கடபதி சிறப்புரை யாற்றினார், கூட்டத்தில் டாஸ்மாக் குடோனில் பணி செய்யும் சுமைப்பணி தொழிலாளர் களுக்கு ஏற்று கூலி உயர்த்தி வழங்க வேண்டும், ஓய்வறை, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில் மாவட்ட தலை வராக எம்.பழனி, மாவட்ட பொதுச்செயலாளராக பி.குமார், பொருளாளராக பி.ஏழுமலை உட்பட 15 பேர் கொண்ட புதிய நிர்வாக குழு தேர்வு செய்யப் பட்டது.