districts

மண் கடத்திய லாரிகள் பறிமுதல்

ஓசூர், ஜூன் 3-

    ஓசூர் டவுன் காவல் துறையினர் ஓசூர் - ராயக்கோட்டை சாலை ஒன்னல்வாடி அருகே ரோந்து சென்றனர்.

    அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற 6 லாரிகளை சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மண் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 6 லாரிகள் மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய பொக் லைன் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.