புதுச்சேரி, மே 13-
புதுவையில் இருந்து சந்தன மரக் கட்டைகள் கடத்தி வரப்படுவதாக விழுப்புரம் மாவட்ட காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் விக்கிரவாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனையபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த வரை மடக்கி விசாரணை நடத்தினர். விசார ணையில் அவர் புதுவை மாநிலம் சோரப் பட்டு மூகாம்பிகை நகரைச் சேர்ந்த சுப்பிரமணி (52) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது, அதில் சுமார் 7 கிலோ எடையுள்ள சந்தன மரக் கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரையும், அவரிடம் இருந்த சந்தனக் கட்டைகளையும் வனச் சரக அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
மேலும், சுப்பிரமணியனிடம் சந்தன கட்டைகளை கொடுத்து அனுப்பியவர் யார்? யாருக்காக கொண்டு வந்தார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.