சென்னை, டிச.30 - கல்லூரி மாணவர்க ளிடையே மோதலை தடுக்க ரயில் நிலையங்க ளில் பாதுகாப்பு தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. சென்னை பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி மாணவர்களிடையே குழு மோதல் ஏற்பட்டது. இதில் மாநில கல்லூரி மாணவர் குமார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண் டார். இதையடுத்து பிரச்ச னைக்குரிய மாணவர்களை கண்டறிந்து உளவியல் ஆலோசனை வழங்க அனைத்து கல்லூரி முதல்வர் களுக்கும் சென்னை காவல் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் மாணவர்க ளிடையே ஏற்படும் மோதலை தடுக்க, கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல், அரக்கோணம் - சென்ட்ரல், செங்கல்பட்டு சென்ட்ரல் மார்க்கத்தில் இயக்கப்படும ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டு வருகின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டி.எஸ்.பி முத்துக்குமார் தலைமை யில் வியாழனன்று (டிச.30) ஆய்வாளர் மற்றும் 25 காவ லர்கள் இணைந்து மின்சார ரயில்களில் செல்லக்கூடிய கல்லூரி மாணவர்களை கண்காணித்து, அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஒரு ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் 25 ரயில்வே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித் துள்ளனர். ஜன.3 வரை விடுமுறை இந்த அசம்பாவிதம் கார ணமாக ஜன.3 வரை பச்சை யப்பன் கல்லூரிக்கு விடு முறை விடப்பட்டுள்ளது.