districts

img

திண்டுக்கல் ஐ. லியோனி பிரச்சாரம்...

கோவை, பிப்.17– சாலை, சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட  அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட வும், உள்ளாட்சிகளை தரம் உயர்த்திடவும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்வீர் என மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரி வித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து கோவை மற் றும் திருப்பூர் மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன்ஒருபகுதி யாக வியாழனன்று கோவை மாநகராட்சி மற்றும் அன்னூர், மேட்டுபாளையம் உள் ளிட்ட பகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பி.ஆர்.நடராஜன் எம்.பி., இறுதி கட்ட பிரச் சாரம் மேற்கொண்டார். அப்போது அவர்  பேசுகையில்,  தமிழக சட்டமன்றத்தில் மக் கள் விரோத கட்சியான பாஜகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளின் ஏகமனதான ஒப்புதலோடு நீட் தேர்விலிருந்து தமிழ கத்திற்கு விலக்கு வேண்டும் என தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அவை   ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டதானது வரலாற்றில் இதுதான் முதல்முறையா கும்.  தற்போது, பாஜக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த காலத்தில் அதிமுகவுக்கு  வராத புத்தி தற்போது வந்திருப்பது மகிழ்ச்சிதான். பாஜக  விரட்டி அடிக்கப்பட வேண்டிய இயக் கம் என்பதை தமிழக மக்கள் ஏற்கனவே புரிந்து கொண்டிருக்கின்றனர். தற்போது வடமாநிலங்களிலும் பாஜகவை அம்மக் கள் விரட்டியடித்துக் கொண்டிருக்கின்ற னர். ஆகவேதான், பாஜகவை அதிமுக கூட் டணியில் இருந்து வெளியேற்றியிருக் கிறது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கொரோனாவை கட்டுப்படுத்த பெரும் முயற்சி மேற்கொண்ட தோடு, கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு  குடும்பத்திற்கும் 4 ஆயிரம்  ரூபாய் அரசால் வழங்கப்பட்டது. மகளி ருக்கு இலவச பேருந்து பயணம் என மக்க ளின் நிலையை அறிந்து தமிழக முதல் வர் ஆட்சி நடத்துகிறார். தமிழ்நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வை  நோக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல் பட்டு கொண்டிருக்கிறார். ஊழலில் ஊறித் திளைத்து கொண்டிருக்கிற உள்ளாட்சியை நல்லாட்சியாக மற்ற வேண்டும் என்பதற் காக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்த தேர்தல் களத்தை சந்திக்கிறது. உள்ளாட்சியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை  வசதிகளை மேம்படுத்த மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கோவை, திருப் பூர் மாவட்டங்களில் மக்களுக்கு தேவையா னதை செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். ஆகவே, நமது உள் ளாட்சிகளை தரம் உயர்த்திட மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தோழமை கட்சிகளின் வேட்பா ளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேசினார்.