districts

100 பள்ளிகளில் சிற்பி திட்டம்: சென்னையில் இன்று துவக்கம்

சென்னை, செப்.13- சிறார் குற்றச்செயல்க ளுக்கு தீர்வு காணும் வகை யில் சென்னையில் 100 மாநக ராட்சி பள்ளிகளில் ‘சிற்பி’ என்னும் புதிய திட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னையில் பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறது. இதன் ஒருபகுதி யாக சிறார்களை நல்வழிப் படுத்துவதற்கான புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படக் கூடிய சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும் சென்னையில் ‘சிற்பி’ திட்டம் செயல் படுத்தப்படும். இந்த திட்டத்தை சென்னை கலை வாணர் அரங்கத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (செப்.14) காலை தொடங்கி வைக்கிறார். சென்னையில் 100 மாந கராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை கொண்டு இந்த சிற்பி திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. பள்ளிகளில் செயல்படும் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) போல் காவல் துறையினரின் நிகழ்ச்சிகளில் மாண வர்களை ஈடுபடுத்தும் வகை யில் இந்த திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. 8 ஆம் வகுப்பு முதல், மாண வர்களை தேர்வு செய்து அவர்களுக்கென தனி சீரு டையும் வழங்கப்பட உள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது.

;