districts

img

74வது குடியரசு தின விழாவின் கப்பல்களை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்

74வது குடியரசு தின விழாவின் ஒரு பகுதியாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள்  சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுஜாதா மற்றும் சிஜிஎஸ் சாரதி ஆகிய போர் கப்பல்களை பார்வையிட்டனர். தேசத்தின் கடல்சார் பாதுகாப்பின் முக்கியத்துவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின் பொதுவான செயல்பாடு மற்றும் கப்பல்களில் உள்ள வாழ்க்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு கடற்படை வீரர்கள் எடுத்துரைத்தனர்.