தமிழகம் முழுவதும் இன்று (ஜூன் 13) பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் சிதம்பரம் ரயிலடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ள முட்செடிகள், மற்றும் குப்பைகளை அகற்றி கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிகளை நகராட்சி ஊழியர்களைக் கொண்டு சிதம்பரம் நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன் மேற்கொண்டார். மேலும் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்கும் விதமாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.