districts

img

சாவித்திரிபாய் புலே படத்திறப்பு

திருவள்ளூர், ஜன 5- மீஞ்சூர் டிவிஎஸ்  மேல் நிலைப் பள்ளியில் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் சார்பாக புதனன்று (ஜன-5) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே பிறந்தநாள் கருத்தரங் கமும்,  படத்திறப்பு நிகழ்ச்சி யும் நடைபெற்றது. இதில் சுமார் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம மூர்த்தி துவக்கி வைத்தார். ஆசிரியை மாலினி வர வேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுக் குழு தாளமுத்து நடராசன் மாவட்ட துணைத் தலைவர் பி.ஜெய் நாராயணன் ஆசிரி யர்கள் சொர்ணா பாய், பாரதி  ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் மோசஸ் பிரபு கருத்துரை வழங்கினார். மீஞ்சூர் ஒன்றிய செயலா ளர் ஆசிரியை தாரணி  நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தார். பொன்னேரி கல்வி மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ஆசிரியர் மஞ்சுளா நன்றி கூறினார்.