districts

img

வீனஸ் பள்ளியில் சாரண - சாரணியர் பயிற்சி முகாம்

சிதம்பரம், நவ. 21- சிதம்பரம் கல்வி மாவட்டத்தில் சாரண- சாரணியர்களுக்கான திருத்திய சோபன் பயிற்சி முகாம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த  இரு நாட்கள் நடை பெற்றது. இந்த முகாமில் சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 10 பள்ளி களைச் சேர்ந்த 71 சாரணி யர்கள் 52  சாரணர் 16  ஆசி ரியர்கள் கலந்து கொண்ட னர். இந்த முகாமை  சிதம்பரம் மாவட்ட சாரண முதன்மை ஆணையர் கனக சபை வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த முகாமை  சிதம்பரம் கல்வி மாவட்ட சாரண தலைவர் எஸ். குமார் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் ரூபியாள்ராணி முன்னிலை வகித்தார். முகாமில் சாரண, சாரணிய இயக்க வரலாறு, பயிற்சி, முதலுதவி, நிலப்படக்கலை, கயிற்றுக் கலை போன்ற பாடத்திட்டங்களை சாரண அமைப்பு ஆணையர்கள் வேலாயுதம், ஜெயந்தி, விருத்தாச்சலம் சாரண செய லாளர் வீரப்பா, கவிதா, செல்வம் ஆகியோர் கற்பித்தனர். முகாம் ஏற்பாடுகளை சாரண ஆசிரியர்கள் வாசுகி, வெங்கடேசன், அருண் பாண்டியன், ஆனந்தி, பிரவீனா, லட்சு மணன் மற்றும் மதன்ராஜ் உள்ளிட்டவர்கள் செய்தி ருந்தனர்.  மாவட்ட சாரண செயலாளர் பாக்யராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.