கிருஷ்ணகிரி ஆக.9- கிருஷ்ணகிரி மாவட்டம், சானமாவு கிராமத்தில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த 41 குடும்பங்களுக்கு 1999 ஆம் ஆண்டில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அந்த நிலத்தை அளந்து கொடுத்த அதிகாரிகள், அதில் வீடு கட்டிக் கொள்ள அனுமதி வழங்கவில்லை. அதனால், அந்த இடத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்ததாக கூறி தனி நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு குறித்து ஆதிதிராவிட நலத்துறை சிறிதும் கவனம் செலுத்தவில்லை. இதன் விளைவு, 25 ஆண்டுகளை கடந்தும் வழக்கு முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் சானமாவு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியை நாடினர். பின்னர், சம்பந்தப்பட்ட துறை வழக்கை விரைவாக நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி வழக்கு தொடுத்தனர். மேலும், பல கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே, 41 பட்டாதாரர்களுக்கு உடனடி யாக நிலத்தை வீடு கட்டிக் கொள்ள அளந்து கொடுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு, அரசு துறை மூலம் வீட்டு மனை பிரிக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கு தொடுத்தவர்க ளில் ஒருவர் மரணமடைந்ததால் அதிகாரி கள் அவகாசம் கேட்டனர். பிறகு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி 41 பட்டா தாரர்கள் வீடு கட்டும் பணியை துவக்கினர். அப்போது, சூளகிரி, ராயக்கோட்டை காவல்துறையினர் துணையுடன் அரசு அதி காரிகள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் நாகேஷ் பாபு, தலைவர் ஆனந்தகுமார், துணைத் தலைவர் நாராயண மூர்த்தி, சிபிஎம் மாநகர செய லாளர் சி.பி.ஜெயராமன் ஆகியோர் அதி காரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தடையை காரணம் காட்டி அதிகாரிகள் அவகாசம் கேட்டனர். மேலும், தடை ஆணை திரும்ப பெற்றதும் பட்டாதாரர்கள் வீடு கட்டிக்கொள்ள நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையொட்டி போராட்டம் கைவிடப்பட்டது.