காஞ்சி மாவட்டம், திருபெரும்புதூரில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனத்தில் தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும் காவல்துறையினர் அடாவடி போக்கை கண்டித்தும் சிஐடியு சார்பில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வியாழனன்று (செப் 19), ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . சிஐடியு மாவட்ட பொருளாளர் என்.நித்தியானந்தம் தலைமையில் மாநில துணைத்தலைவர் கே.விஜயன், மாவட்டத் துணைச் செயலாளர் ஏ.ஜி.சந்தானம்,மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.அனீப், இ.ஜெயவேலு, ஆட்டோ சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சந்திரசேகரன், சோழவரம் ஒன்றிய செயலாளர் வேலு, சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.