districts

ரேசன் கடைகளில் விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு

சென்னை, செப். 28- ரேசன் கடைகளில் சுமார் 4,000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணி இடங்களை மாவட்ட ஆட் சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் இந்த தேர்வு நடவடிக் கைக்கு அதிகமானோர் விண்ணப்பிக்கக் கூடும் என்பதால், தேர்வுகளை எந்தவித புகாருக்கும் இடமின்றி நடத்துவதற்கு ஏதுவாக  மாவட்டத்தில் உள்ள பல்வேறு  அரசுத்துறைகளும் ஒத்துழைப் பும் உதவிகளும் நல்கிட வேண்டும்  என்றும், நேர்முகத் தேர்வு நடை பெறும் நாளில் நேர்முகத் தேர்வு மையத்திற்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விற்பனை யாளர் மற்றும் கட்டுநர் பணியிடத் திற்கு விண்ணப்பங்களை தகுந்த  சான்று மற்றும் ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கு மாறு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும், தபாலிலோ அல்லது நேரடியாகவோ பெறப் படும். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய மானது பொது விநியோகத்திட்டத் தின் கீழ் தற்போது காலிப்பணியிடம் ஏற்பட்ட நாளிலிருந்து 15 நாட்களு க்குள்ளும் பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அத்தகைய காலிப்பணியிடம் ஏற்படக் கூடும் நாளில் இருந்து 90  நாட்களுக்கு முன்னரும் காலிப்பணி இடங்களுக்கான விவரங்களை எழுத்து மூலமாக சங்கங்களில் இருந்து பெற வேண்டும். மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையமானது அரசு பணியிடங்களுக்கு பின் பற்றப்படும் 200 புள்ளி இனச் சுழற்சி, இடஒதுக்கீட்டு விதிகள், முன் னுரிமை மற்றும் இதர நெறிமுறை கள் தொடர்பான நடைமுறையில் உள்ள அரசாணைகள், சட்டப் பிரிவுகள், விதிகள் ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும். நியாய விலைக்கடை விற்பனையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் என்றும், கட்டுநர் பணி யிடத்திற்கு பள்ளி இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும் என்றும் கூறப்பட் டுள்ளது.

;