districts

img

சைதாப்பேட்டை ரயில்வே சுரங்கப்பாதை முறையாக பராமரிக்கப்படுமா ?

சென்னை சைதாப் பேட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள சுரங்கப் ப்பாதை முறையான பராம ரிப்பு இல்லாததால் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. சுரங்கத்தின் மேற்புறம், படி கட்டு உள்ளிட்ட பக்க வாட்டு பகுதிகளில்  நீர் கசிவு ஏற்படுகிறது அதனால் துர்நாற்றம் வீசுகிறது. நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கடக்கும் இந்த பாதையில் பெரும்பாலான நேரங்களில் மதுப்பிரியர் கள் ஆக்கிரமித்துள்ளனர். மதுபாட்டில்கள், பிளா ஸ்டிக் கப்புகள்,  உடைந்த கண்ணாடித் துண்டுகள் என படிகட்டுக்கள் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.  பல நேரங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு இருண்டு காணப்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் கடந்து செல்லும் போது மிகுந்த சிரமத்திற்கு ஆளா கின்றனர்.   அருகிலேயே  டாஸ்மாக்  கடை அமைந்தி ருப்பதால் மது பிரியர்கள் குடித்துவிட்டு போதையில்  சுரங்கப்பாதையில் படுத்துக் கிடக்கிறார்கள்.    மாநகராட்சி ஊழியர்கள் நாள்தோறும் துப்புரவு பணியில் ஈடுபட்டாலும் ஒரு சில மணிநேரங்களில் குப்பைகள் குவிந்து விடுகிறது. படிக்கட்டுகளில் மண் தேங்கியுள்ளதால் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சி யளிக்கிறது.  இந்த சுரங்கப் பாதையை சீரமைத்து தரவேண்டும் என்று ரயில் பயணிகளும் பொது மக்களும்  கோரிக்கை விடுத் துள்ளனர். ரோந்து காவ லர்கள் அடிக்கடி இந்த சுரங்க ப்பாதையை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  கு.கீர்த்தனா