அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் முன்னணி ஊழியர் எஸ்.சிவஞானம் அண்மையில் பணி நிறைவு பெற்றார். இதனையொட்டி செவ்வாயன்று (ஜூன் 13) கிண்டியில் நடைபெற்ற சங்க பேரவைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சங்க கட்டட நிதியாக தலா ரூ10 ஆயிரம், தீக்கதிர் நாளிதழ், நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதியாக தலா ரூ 5 ஆயிரம், வர்க்க, வெகுஜன அமைப்பு இதழ்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் என ரூ35 ஆயிரத்தை சங்கத்தின் தலைவர் ஆர்.துரையிடம் வழங்கினார். சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், சிவா உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.