திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள தமிழ்மின் நகரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் எஸ்.பஞ்சரத்தினம் நினைவு கூட்ட அரங்கத்தை சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன் திறந்து வைத்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், சிஐடியு மாநிலச் செயலாளர் முத்துக்குமார், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. பாரி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.