districts

img

எஸ்.கிருஷ்ணமூர்த்தி நினைவு சொற்பொழிவு

சென்னை, ஏப்.30 - சென்னயில் சாய் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட எஸ்.கிருஷ்ணமுர்த்தி முதலாவது நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் புகழ்பெற்ற சட்ட வல்லுநரும், தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான பேராசிரியர் உபேந்திரா பக்சி சிறப்புரையாற்றினார்.  கடினமான தொழில்நுட்பங்களை கையாளும் சட்டத்தின் மென்மையான தொழில்நுட்பம்?’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். சட்டமே தொழில்நுட்பமாக கருதப்படலாமா, அப்படியானால் அது எந்த வகையான தொழில்நுட்பமாக இருக்கலாம் என்ற கேள்வியை ஆராயும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர்,  மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம்பஞ்சு, சாய் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கே.வி. ரமணி, துணைவேந்தர் பேராசிரியர் ஜாம்ஷெட் பருச்சா, சட்டப் பள்ளியின் முதல்வர் பேராசிரியர் ரீனா படேல் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட னர். துணை முதல்வர் பேராசிரியர் எம்.வி.ஷிஜு நன்றி கூறினார்.