districts

ரூ.2.3 கோடி போதைப்பொருள் பறிமுதல்

சென்னை,ஏப்.23- ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து சென்னை விமான நிலை யத்தில் பார்சல் ஒன்றை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் துணிகள், புத்த கங்கள் உள்ளிட்ட பொருட்கள்  வைக்கப்பட்டி ருந்தது. அதற்கு கீழே மரப்பெட்டி ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. அதை திறந்து பார்த்ததில் பிளாஸ்டிக் பை ஒன்றில் 920 கிராம் எடையிலான மெத் கிறிஸ்டல் போதை பொருள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து விமான நிலைய சுங்கத்துறை அதி காரிகள் 2.3 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த மெத் கிறிஸ்டல் போதை பொருளை கைப்பற்றினர்.